வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
நாகை நகராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
நாகை நகராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
நாகூரில் ரூ. 6 கோடி மதிப்பில் நடைபெறும் புதை சாக்கடைத் திட்ட சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள், அக்கரைகுளம் பகுதியில் ரூ. 3.15 கோடி மதிப்பில் நடைபெறும் குடிநீர் ஆதார மேம்பாட்டுத் திட்டப் பணிகள், நகராட்சி மேட்டு பங்களா பகுதியில் ரூ. 60 லட்சம் மதிப்பில் நடைபெறும் பூங்கா அமைக்கும் பணிகள் ஆகியவற்றை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, நாகை மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் ரூ. 64 லட்சம் மதிப்பில் நடைபெறும் உள்நோயாளிகளுடன் தங்குவோருக்கான ஓய்வறை கட்டும் பணியை அவர் ஆய்வு செய்தார்.
நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர்கள் வசந்தன் மற்றும் அலுவலர்கள்உடனிருந்தனர்.