கர்நாடக ராமகிருஷ்ணா சேவாஸ்ரம் சார்பில் நிவாரண உதவி
வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரனிருப்பு கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடக
வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரனிருப்பு கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடக ஸ்ரீராமகிருஷ்ணா சேவாஸ்ரம் சார்பில் ரூ. 85 லட்சம் மதிப்பில் நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
வேட்டைக்காரனிருப்பு கிராமத்தில் சுமார் 2,500 குடும்பத்தினர் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டம், பாவகடாவில் செயல்படும் ஸ்ரீ ராமகிருஷ்ணா சேவாஸ்ரம் மற்றும் இன்போஸிஸ் நிறுவனம் சார்பில் தார்ப்பாய், சூரிய சக்தி விளக்கு, போர்வைகள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட ரூ.3,500 மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்பட்டன. வேட்டைக்காரனிருப்பு அரசுப் பள்ளி வளாகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். பாவகடா விவேகனந்தா ஆஸ்ரமம் சுவாமிஜி ஐப்பானந்தா சுவாமிகள், திருவேற்காடு டி.ரமேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் நாகூர் அரிமா சங்கத் தலைவர் ஆர். ராஜேந்திரன் மற்றும் சென்னை அரும்பாக்கம், தாம்பரம், பெருங்களத்தூர் அரிமா சங்க நிர்வாகிகள், காவல் துறை நண்பர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.