விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு கருத்தரங்கம்
விபத்தில்லாமலும், மாசில்லாமலும் தீபாவளியை கொண்டாடுவது தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கம், நாகையை
விபத்தில்லாமலும், மாசில்லாமலும் தீபாவளியை கொண்டாடுவது தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கம், நாகையை அடுத்த நாகூர் தேசிய மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
சுற்றுச்சூழல் துறை மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை இணைந்து நடத்திய இக்கருத்தரங்கில் நாகூர் தேசிய மேல்நிலைப் பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளி, மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வேதாரண்யம் கஸ்தூர்பாய் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தேசிய பசுமைப்படை நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சூழல் பொறியாளர் ராமசுப்பு, கருத்தாளர் செங்குட்டுவன் ஆகியோர் பங்கேற்று விபத்தில்லாமலும், மாசில்லாமலும் தீபாவளியைக் கொண்டாடுவது குறித்து விளக்கிப் பேசினர். கருத்தரங்க நிறைவில், மாணவர்கள் உறுதி மொழியேற்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் பள்ளி தலைமையாசிரியர் குழந்தைவேலு, ஆசிரியர்கள் ரகு, அருள் ஜோதி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் அயூப் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். ஆசிரியர் பிரியா வரவேற்றார். கற்பகவள்ளி நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.