முகப்பு
நாகப்பட்டினம்

கல்லூரியில் வாக்காளர் தின விழா

தரங்கம்பாடி தூய தெரசா மகளிர் கல்லூரியில், தேசிய வாக்காளர் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 24 ஜனவரி 2019, 2:53 am IST
பகிர்:

தரங்கம்பாடி தூய தெரசா மகளிர் கல்லூரியில், தேசிய வாக்காளர் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி மாணவிகளிடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில், தரங்கம்பாடி வட்டாட்சியர் சுந்தரம், தேர்தல் துணை வட்டாட்சியர் பிரான்சுவா ஆகியோர் கலந்துகொண்டனர்.
கல்லூரி முதல்வர் தம்பையா பிரபுதாஸ் தலைமை வகித்தார். நிர்வாகி அருட்சகோதரி வின்சென்ட் அமலா முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை பேராசிரியர் புகழேந்தி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.