கல்லூரியில் வாக்காளர் தின விழா
தரங்கம்பாடி தூய தெரசா மகளிர் கல்லூரியில், தேசிய வாக்காளர் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
தரங்கம்பாடி தூய தெரசா மகளிர் கல்லூரியில், தேசிய வாக்காளர் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி மாணவிகளிடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில், தரங்கம்பாடி வட்டாட்சியர் சுந்தரம், தேர்தல் துணை வட்டாட்சியர் பிரான்சுவா ஆகியோர் கலந்துகொண்டனர்.
கல்லூரி முதல்வர் தம்பையா பிரபுதாஸ் தலைமை வகித்தார். நிர்வாகி அருட்சகோதரி வின்சென்ட் அமலா முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை பேராசிரியர் புகழேந்தி நன்றி கூறினார்.