கடற்படை தலைமைத் தளபதியாக கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!
கடற்படை தலைமைத் தளபதியாக இருந்த தினேஷ் கே.திரிபாதி பணி ஓய்வு பெற்றார்...
புது தில்லி : இந்திய கடற்படை தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் ஞாயிற்றுக்கிழமை (மே 31) பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடற்படை தலைமைத் தளபதியாக இருந்த தினேஷ் கே.திரிபாதி பணி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து இந்திய முப்படைகளின் முக்கிய பதவிகளுள் ஒன்றான கடற்படை தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய கடற்படையின் 27-ஆவது தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுடன் பேசிய அவர், “இந்திய கடற்படை தேச நலன்களைப் பாதுகாக்க விழிப்புடன் நிற்கிறது. மேலும், சவாலானதாகவும் கணிக்க முடியாததாகவும் நிலைத்தன்மையற்றதாகவும் நீடிக்கும் பிராந்திய பாதுகாப்பு சூழலில் செம்மையாக பணியில் ஈடுபட்டுள்ளது.
Advertisement
Advertisement
எனது உச்சபட்ச குறிக்கோளாக இந்திய ராணுவத்தை உயர்நிலையில் தயார் நிலையிலும் திறம்படவும் நிலைத்திருக்கச் செய்வதே. அதன்மூலம், தேசப் பாதுகாப்பையும் பொருளாதார நலன்களையும் பாதுகாக்கவும் அதனால் முடியும்” என்றார்.