முகப்பு
இந்தியா

ராணுவ தலைமைத் தளபதியாக தீரஜ் சேத் பொறுப்பேற்றார்!

ராணுவத்தின் புதிய தலைமை தளபதி பொறுப்பேற்றுள்ளது பற்றி...

Updated On : 30 ஜூன் 2026, 3:37 pm IST
தீரஜ் சேத் - கோப்புப் படம்
பகிர்:

இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக ஜெனரல் தீரஜ் சேத் இன்று(ஜூன் 30) பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னதாக, இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி கடந்த 2024 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில் இன்றுடன்(ஜூன் 30) அவரது பதவிக்காலம் நிறைவு பெற்றது. இதனால் திவிவேதி இன்று பதவி ஓய்வு பெற்றார்.

நாட்டின் 31 ஆவது ராணுவ தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தார்.

Advertisement

Advertisement

அதன்படி ராணுவ துணைத் தளபதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத், ராணுவ தலைமைத் தளபதியாக பதவி உயர்வு பெற்ற நிலையில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

1986ல் ராணுவத்தில் சேர்ந்த அவர், 40 ஆண்டுகள் ராணுவத்தில் பல்வேறு பணிகளில் இருந்துள்ளார். புணே கடக்வாஸ்லா தேசிய பாதுகாப்பு அகாதெமியின் முன்னாள் மாணவர். ராணுவ கமாண்டர், கவசப் படைப்பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளார். தென் பகுதியின் கமாண்டராக இருந்து பின்னர் ராணுவ துணைத் தளபதியானார்.

பாலைவனப் பகுதிகள், மேற்குப் பகுதி மற்றும் ஜம்மு-காஷ்மீா் என நாட்டின் எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆயுதமேந்திய படைகளை வழிநடத்தியுள்ளாா். ராணுவத்தை நவீனப்படுத்தவும், வலுப்படுத்துவதற்குமான வியூகத் திட்டங்களை வகுப்பவராக அறியப்படுகிறார்.

லெப்டினன்ட் ஜெனரலாக, ராணுவத்தின் அதிதிறன் மிக்க தாக்குதல் படைகளில் ஒன்றான ‘சக்ரா காா்ப்ஸ்’ படையை வழிநடத்தியுள்ளாா். தில்லி பகுதியில் கமாண்ட் அதிகாரியாக பதவி வகித்தபோது தேசிய மற்றும் சா்வதேச ராணுவ ஒத்துழைப்புகளுக்கு முக்கியப் பங்காற்றியுள்ளாா்.

ராணுவத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக, நேற்று(ஜூன் 29) குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து உத்தம் யுத் சேவா பதக்கம் பெற்றார்.

இந்திய எல்லைகளில் பாதுகாப்பு சவால்கள் அதிகரித்துள்ள நிலையில் ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக தீரஜ் சேத் பொறுப்பேற்றுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

summary

General Dhiraj Seth takes charge as India new Army chief

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments