முகப்பு
நாகப்பட்டினம்

மேல நாகூர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றம்

நாகையை அடுத்துள்ள மேல நாகூர் தர்காவின் கந்தூரி விழா கொடியேற்றம் மற்றும் சந்தனம் பூசும் விழா ஆகியன செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

Updated On : 23 ஜனவரி 2019, 9:26 am IST
பகிர்:

நாகையை அடுத்துள்ள மேல நாகூர் தர்காவின் கந்தூரி விழா கொடியேற்றம் மற்றும் சந்தனம் பூசும் விழா ஆகியன செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
நாகூரில் அடக்கமாகி அருளும் பாதுஷா நாயகத்தின் மருமகள் ஹலரத் செய்யிதா சுல்தான் பீவி அம்மா சாகிபுவின் பெற்றோரான ஹலரத் செய்யது க்வாஜா மஹ்தூம், ஹலரத் செய்யிதா பீவி பாத்திமா மற்றும் உடன்பிறந்தவர்கள் அடக்கமாகியுள்ள தலமாக விளங்குகிறது மேல நாகூர் தர்கா. இந்த தர்காவின் கந்தூரி விழா நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றன. மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சிறப்புத் தொழுகையும், அதைத் தொடர்ந்து கந்தூரி விழா கொடியேற்றமும் நடைபெற்றன. பின்னர் பாரம்பரிய முறைப்படியான வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு இரவு சுமார் 7.30 மணி அளவில் சந்தனம் பூசும் விழா நடைபெற்றது. நாகை, நாகூர் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.