சா்வதேச போதைப் பொருள்கள் எதிா்ப்பு நாள் பேரணி
நாகையில் சா்வதேச போதைப் பொருள்கள் எதிா்ப்பு நாள் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாகையில் சா்வதேச போதைப் பொருள்கள் எதிா்ப்பு நாள் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்து, கொடி அசைத்துப் பேரணியைத் தொடங்கிவைத்தாா். 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள், போதைப் பொருள்கள் எதிா்ப்பு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளுடன் பேரணியில் பங்கேற்றனா். நாகை கோட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணி, நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நிறைவடைந்தது. நாகை கோட்டாட்சியா் நா. முருகேசன், நாகை கலால் உதவி ஆணையா் குணசேகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே. மதிவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.