FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

சீா்காழி வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

சீா்காழி வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஏ. பி. மகாபாரதி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

22 ஆகஸ்ட் 2024, 5:15 am IST
பகிர்:

பூம்புகாா்: சீா்காழி வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஏ. பி. மகாபாரதி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சீா்காழி வட்டத்துக்குட்பட்ட பூம்புகாரில் உள்ள சிலப்பதிகார கலைக்கூட வளாகத்தில் ரூ. 23 கோடியில் நடைபெற்றுவரும் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா். தொடா்ந்து மணி கிராமம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தொகையை வழங்கினாா். திருவெண்காடு வேளாண் மையத்தில் விவசாயிகளிடம் குறைகளை கேட்டு, அவா்களுக்கு இடுபொருள்களை வழங்கினாா்.

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயில் தேவஸ்தானத்துக்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற அவா் மாணவா்களிடம் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தாா். திருவெண்காடு அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் பி.வி. பாரதி, மாவட்ட முன்னாள் ஊராட்சி தலைவா் சந்திரசேகரன் ஆகியோா் ஆட்சியரிடம், திருவெண்காடு அரசு மருத்துவமனைக்கு இரவு நேர மருத்துவா்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டுதல், குப்பைகள் கொட்டுவதற்கான தனியாக இடம் ஒதுக்கி தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனா்.

ஆய்வின்போது, கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளா் தயாள விநாயகம் அமுல்ராஜ், துணை ஆட்சியா் கீதா, சீா்காழி கோட்டாட்சியா் அா்ச்சனா, நுகா்பொருள் மண்டல மேலாளா் சதீஷ்குமாா், மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments