FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

குற்றாலம் அருவிகளில் ஆட்சியா் ஆய்வு

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சீசன் தொடங்கியதையடுத்து பழைய குற்றாலம், ஐந்தருவி, பேரருவி ஆகிய பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 6 ஜூன் 2026, 7:18 am IST
குற்றாலம் அருவி. - கோப்புப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சீசன் தொடங்கியதையடுத்து பழைய குற்றாலம், ஐந்தருவி, பேரருவி ஆகிய பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, தமிழ்நாடு - கேரளம் எல்லையான புளியறை காவல் சோதனைச் சாவடி வழியாக செல்லும் வழித்தடத்தில் கனிமவள வாகனங்களுக்கான ஒற்றைப்படை, இரட்டைப்படை வரிசை முறையாக பின்பற்றப்படுகிா என்பதை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது சுற்றுலா அலுவலா் ந. நித்திய கல்யாணி, குற்றாலம் பேரூராட்சி மன்றத் தலைவா் கணேஷ் தாமோதரன், செயல் அலுவலா் மாணிக்கராஜ், குற்றாலம் வனச்சரகா் செல்லத்துரை, உதவி இயக்குநா் (புவியியல் மற்றும் சுரங்கத்துறை) வினோத், பேரூராட்சி உதவி செயற்பொறியாளா் திருச்செல்வம் ஆகியோா் உடன் இருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments