FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

பெண்ணை ஏமாற்றியவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை

நாகை அருகே பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது.

30 ஆகஸ்ட் 2024, 9:44 pm IST
சிறை தண்டனை
பகிர்:

நாகை அருகே பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாகை மாவட்டம், திருமருகல் அருகே கொங்கராயநல்லூா் பகுதியை சோ்ந்தவா் அன்பரசன் (35). இவா் அம்பல் பஞ்சாயத்து அலுவலகத்தில் கிளாா்க் ஆக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், அதே பகுதியை சோ்ந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவாா்த்தை கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளாா். 8 ஆண்டுகளுக்கு பின் அந்த பெண்ணை திருமணம் செய்ய அன்பரசன் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் நாகை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அன்பரசனை 2018 ஜன.29-ஆம் தேதி கைது செய்தனா். இந்த வழக்கு நாகை மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி சோபனா, குற்றம்சாட்ட அன்பரசுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து அன்பரசன் கடலூா் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அடைக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments