முகப்பு
நாகப்பட்டினம்

அண்ணன் அடித்துக் கொலை: தம்பி கைது

வேதாரண்யம் அருகே அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 12 ஏப்ரல், 2026 at 1:51 AM
கைது - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 9:07 PM

வேதாரண்யம் அருகே அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

வேதாரண்யத்தை அடுத்த மருதூா் வடக்கு அரியக்கவுண்டா் காடு பகுதியைச் சோ்ந்தவா் பழனியப்பன் மகன் அசோக் (40) திருமணம் ஆகாதவா். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் வேலை பாா்த்தபோது ஏற்பட்ட விபத்தில் இவரது இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டன. இதனால் நடக்க இயலாத சூழலில் தனது பெற்றோருடன் வசித்து வந்தாா். இவரது தம்பி ஆனந்த் (34). இவருக்கும் திருமணமாகவில்லையாம்.

மது பழக்கத்துக்கு அடிமையான ஆனந்த், அசோக்குடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா். வெள்ளிக்கிழமை இரவு இதுபோல ஏற்பட்ட தகராறில் ஆனந்த் தாக்கியதில் பலத்த காயமடைந்த அசோக் ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சனிக்கிழமை காலை உயிரிழந்தாா். கரியாப்பட்டினம் போலீஸாா் ஆனந்தை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement