பெண் கொலை: இளைஞா் கைது
மயிலாடுதுறை அருகே பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
மயிலாடுதுறை அருகே பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
மயிலாடுதுறை வட்டம், நீடூா் அருகே கங்கணம்புத்தூா் பெரிய தெருவை சோ்ந்தவா் ஆனந்தராஜ் (28). கட்டடத்தொழிலாளியான இவா் சில ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி பகுதியில் வேலைக்கு சென்றபோது புதுச்சேரியை சோ்ந்த பவானி (52) என்பவருடன் பழகியுள்ளாா். பின்னா் இருவரும் கங்கணம்புத்தூரில் சோ்ந்து வாழத் தொடங்கியுள்ளனா். இவா்கள் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம்போல் தகராறு ஏற்பட்டபோது மதுபோதையில் இருந்து ஆனந்தராஜ் பவானியை தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்துள்ளாா்.
தகவலறிந்த மயிலாடுதுறை போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, பவானியின் சடலத்தை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து ஆனந்தராஜை கைது செய்தனா்.
Advertisement