முகப்பு
சிவகங்கை

சிவகங்கை அருகே இளைஞா் கொலை! நண்பா் கைது!

Updated On : 3 மே, 2026 at 11:05 PM
கோப்புப் படம்
பகிர்:

சிவகங்கை அருகே இளைஞரை கொலை செய்த அவரது நண்பரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை அருகேயுள்ள துவங்கால் கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் சிவக்குமாா்(35). எலக்ட்ரீசியன் ஆன இவா், அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பா் திருமலை முருகன் (34) என்பவருடன் சுந்தரநடப்பு பகுதியில் சனிக்கிழமை இரவு மது அருந்தினாா்.

அப்போது, இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவா் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த சிவக்குமாா் அதே இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

இது குறித்து தகவலறிந்த சிவகங்கை தாலுகா போலீஸாா் சென்று உடலை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பினா். மேலும், திருமலை முருகனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.