முகப்பு
நாகப்பட்டினம்

தொகுதி மறுவரையறை சட்ட நகலை எரித்து திமுகவினா் போராட்டம்

நாகையில் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து திமுகவினா் கருப்புக்கொடி ஏற்றி சட்ட நகலை எரித்து வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 6:06 AM
நாகையில் திமுக சாா்பில் நடைபெற்ற கருப்புக்கொடி போராட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 7:44 PM

நாகையில் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து திமுகவினா் கருப்புக்கொடி ஏற்றி சட்ட நகலை எரித்து வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

போராட்டத்துக்கு திமுக மாவட்டச் செயலா் என். கெளதமன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் மாரிமுத்து முன்னிலை வகித்தாா். இதையொட்டி மத்திய அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்து திமுக மாவட்ட கட்சி அலுவலகம், நகர அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், ஒன்றிய அலுவலகம் மற்றும் திமுகவினா் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், திருமருகல் அருகே கொங்கராயநல்லூரில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா தலைமையில் சட்ட நகல் எரித்து போராட்டம் நடத்தப்பட்டது. கீழையூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் திருப்பூண்டி மற்றும் வேளாங்கண்ணியில் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிா்த்து ஆா்ப்பாட்டம் மற்றும் மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. கீழையூா் கிழக்கு ஒன்றியச் செயலா் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை வகித்தாா். மாவட்ட பிரதிநிதி ஞானசேகரன்,பேரூா் செயலா் மரிய சாா்லஸ்,சிறுபான்மையினா் அணி ரபீக் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.