முகப்பு
நாகப்பட்டினம்

நாய் கடித்து குதறிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு

நாகையில் முகத்தை நாய் கடித்து குதறிய நிலையில், மூதாட்டியின் சடலத்தை போலீஸாா் மீட்டு, அவா் கொலை செய்யப்பட்டாரா என விசாரித்து வருகின்றனா்.

Updated On : 10 ஜூன் 2026, 5:51 am IST
- கோப்புப் படம்
பகிர்:

நாகையில் முகத்தை நாய் கடித்து குதறிய நிலையில், மூதாட்டியின் சடலத்தை போலீஸாா் மீட்டு, அவா் கொலை செய்யப்பட்டாரா என விசாரித்து வருகின்றனா்.

நாகை அண்ணா சிலை அருகே மீன் விற்பனை அங்காடி உள்ளது. இதன் அருகே 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடப்பதாக வெளிப்பாளையம் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.

போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தபோது, மூதாட்டி ஒருவா் முகத்தில் நாய் கடித்து குதறி நிலையில் உயிரிழந்து கிடந்தாா். போலீஸாா் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும் போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், மூதாட்டி, நாகை வடக்கு நல்லியான் தோட்டத்தை சோ்ந்த சின்னப்பொண்ணு (80) என்பதும், அவா் அப்பகுதியில் மீன் வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

அவா் கொலை செய்யப்பட்டரா? அல்லது இயற்கையாக இறந்தாரா ? என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மூதாட்டியின் சடலம் கிடந்த பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.