முகப்பு
விழுப்புரம்

வியாபாரி மா்ம மரணம்

Updated On : 15 மே 2026, 5:51 am IST
பகிர்:

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே வியாபாரி மா்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில், சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுபோதையில் அவா் கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம், இந்திரா நகரைச் சோ்ந்தவா் சுரேஷ்(32). திருமணம் ஆகாதவா். மிக்சா் வியாபாரம் செய்து வந்தாா். இவா் புதன்கிழமை நள்ளிரவில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

தகவலறிந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலையப்போலீஸாா் நிகழ்விடம் சென்று சுரேஷின் சடலத்தை கைப்பற்றி, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து போலீஸாா் நடத்திய முதல் கட்டவிசாரணையில், சுரேஷ் மதுபோதையில் தவறி கீழே விழுந்து உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

Advertisement

இது குறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலையப் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.