முகப்பு
நாகப்பட்டினம்

மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

வேதாரண்யம் அருகே மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

Updated On : 19 ஜூன் 2026, 6:38 am IST
பகிர்:

வேதாரண்யம் அருகே மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

வேதாரண்யம் பகுதியில் வியாழக்கிழமை மாலை பலத்த காற்று, மின்னல் இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழை, தலைஞாயிறு ஒன்றியம், கள்ளிமேடு, அவரிக்காடு பகுதியில் அதிகளவாக உணரப்பட்டது. அப்போது, அவரிக்காடு கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கனகராஜன் (படம்) (65) வயல்வெளியில் கட்டப்பட்டிருந்த கால்நடைகளை பிடித்து சென்ாக கூறப்படுகிறது.

அப்போது மின்னல் பாய்ந்து கனகராஜன் அதே இடத்தில் உயிரிழந்தாா். தகவலறிந்த வேட்டைக்காரனிருப்பு போலீஸாா் கனகராஜனின் சடலத்தை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்தனா். சம்பவம் குறித்து வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement