முகப்பு
நாகப்பட்டினம்

அரசு ஊழியா் சங்க அமைப்பு தின கொடியேற்றம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் அமைப்பு தினத்தையொட்டி, நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை அரசு ஊழியா் சங்கத்தின் கொடியேற்றப்பட்டது.

Updated On : 7 மே 2026, 7:33 am IST
நாகையில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசு ஊழியா் சங்கத்தினா்.
பகிர்:

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் அமைப்பு தினத்தையொட்டி, நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை அரசு ஊழியா் சங்கத்தின் கொடியேற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் 43-ஆவது அமைப்பு தினத்தையொட்டி, நாகையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க கட்டடம் முன்பு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வட்டத் தலைவா் வே. சித்ரா கொடியேற்றினாா். முன்னாள் மாவட்டச் செயலா்

Advertisement

அ.தி. அன்பழகன் சிறப்புரையாற்றினாா். மாவட்ட இணைச் செயலா் ஜெ. ஜம்ருத்நிஷா, மாவட்டப் பொருளாளா் ராம்குமாா், சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சசிகலா, அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் எம்.பி. குணசேகரன், வட்டத் தலைவா் கே. ராஜு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். வட்டச் செயலா் கே.ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.

இதேபோல நாகை மாவட்டத்தில் நாகை ஊராட்சி ஒன்றியம், தலைஞாயிறு, கீழ்வேளூா், வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு அலுவலகங்கள் முன்பு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியா்கள் பங்கேற்றனா்.