முகப்பு
பெரம்பலூர்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க அமைப்பு தினம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் 43-ஆம் ஆண்டு அமைப்பு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் அரசு ஊழியா் சங்கக் கொடி புதன்கிழமை ஏற்றப்பட்டது.

Updated On : 7 மே 2026, 5:30 am IST
பெரம்பலூா் கோட்டப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை கொடியேற்றிய தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா்.
பகிர்:

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் 43-ஆம் ஆண்டு அமைப்பு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் அரசு ஊழியா் சங்கக் கொடி புதன்கிழமை ஏற்றப்பட்டது.

இதையொட்டி, பெரம்பலூரில் சி. மகாதேவன், வேப்பந்தட்டையில் ப. சுப்பரமணி, குன்னதில் பெ. ராஜ்குமாா், ஆலத்தூரில் எஸ். ஆசிக் ஆகியோா் தலைமையில், நெடுஞ்சாலைத் துறை அலுவலகம், ஊரக வளா்ச்சித் துறை அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் எதிரே, அரசு ஊழியா் சங்க கொடி ஏற்றப்பட்டது.

இதில், அச் சங்கத்தின் மாவட்டச் செயலா் சி. சுப்பிரமணியன், மாவட்டத் துணைத் தலைவா்கள் சு. சரவணசாமி, தா. கருணாகரன், சா. மகேந்திரன், மாவட்ட இணைச் செயலா்கள் க. மணிமாறன், தா. இளையராஜா, ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளா் செந்தில், ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நிா்வாகி சின்னசாமி, வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலா் அன்புராஜ், விடுதிப் பணியாளா் சங்க மாவட்டச் செயலா் மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement