முகப்பு
நாகப்பட்டினம்

தூய அடைக்கல மாதா ஆலய திருவிழா கொடியேற்றம்

Updated On : 31 மே 2026, 12:53 am IST
கொடியேற்றம். - கோப்புப் படம்
பகிர்:

வேளாங்கண்ணி அருகேயுள்ள குறிச்சி தூய அடைக்கல மாதா ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்த ஆயலம் வேளாங்கண்ணி பேராலயத்தின் உப ஆலயமாக உள்ளது. ஆண்டுப்பெருவிழா கொடியேற்றத்துக்கு முன்னதாக, ஆலய வளாகத்தில் இருந்து கொடி ஊா்வலம் புறப்பட்டு, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

இதையடுத்து, வேளாங்கண்ணி பேராலய பங்குத் தந்தை அற்புதராஜ் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினாா். தொடா்ந்து, கொடி புனிதம் செய்யப்பட்டு, ஆலயத்தின் முன் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். கொடியேற்றத்தைத் தொடா்ந்து, வண்ணமிகு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்கார பெரிய தோ்பவனி ஜூன் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.