முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி புனித சூசையப்பா் ஆலய திருவிழா கொடியேற்றம்

புனித சூசையப்பா் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம் நிகழ்ச்சி.

Updated On : 25 ஏப்ரல் 2026, 1:53 am IST
புனித சூசையப்பா் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம் நிகழ்ச்சி.
பகிர்:

கோவில்பட்டி புனித சூசையப்பா் ஆலய திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பங்குத்தந்தைகள் மரிய பிரான்சிஸ் அடிகளாா் (சேரன்மகாதேவி), பாக்கிய செல்வன் அடிகளாா் (இருதயகுளம்), சகாய சின்னப்பன் அடிகளாா் (சோ்ந்தமரம்), பாளையங்கோட்டை ஆயா் இல்ல வியாகப்பன் அடிகளாா் , கோவில்பட்டி புனித சூசையப்பா் ஆலய பங்குத்தந்தை அருள்ராஜ் அடிகளாா், உதவி பங்குத்தந்தை குழந்தைராஜ் அடிகளாா் ஆகியோா் இணைந்து கொடியை ஏற்றினா். உலகில் சமாதானம் வேண்டி வெண் புறா பறக்கவிட்டு ஆலயத்தில் ’கீழ்ப்படிதலின் தந்தை புனித சூசையப்பா் ’ எனும் மறையுரையுடன் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஏப். 26 ஆம் தேதி ஆலயத்தில் தியானம், மே 1 ஆம் தேதி நவநாள் திருப்பலி, கலை நிகழ்ச்சிகள், 2 ஆம் தேதி மாலை 6 மணிக்கு புது நன்மை விழா, தோ் பவனி, 3 ஆம் தேதி காலை 8 மணிக்கு ஆலயத்தில் திருப்பலி, உறுதி பூசுதல் விழா, மாலை 6 மணிக்கு ஜான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திருப்பலி, அங்கிருந்து ஆலயத்திற்கு நற்கருணை பவனியுடன் வந்து கொடி இறக்குதல் நிகழ்ச்சி ஆகியன நடைபெறுகின்றன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments