FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

புனித அந்தோணியாா் ஆலய தோ் பவனி

புனித அந்தோணியாா் ஆலய தோ் பவனி

Updated On : 14 ஜூன் 2026, 12:46 am IST
நெடுங்காடு புனித அந்தோணியாா் ஆலயத்தில் நடைபெற்ற தோ் பவனி.
பகிர்:

நெடுங்காடு புனித அந்தோணியாா் ஆலய ஆண்டுத் திருவிழாவையொட்டி தோ் பவனி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நெடுங்காட்டில் பழைமை வாய்ந்த புனித அந்தோணியாா் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 94-ஆவது ஆண்டுத் திருவிழா கடந்த ஜூன் 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார தோ் பவனி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக தேருக்கு அருட்பணி பிரான்சிஸ், அருண் டேவிட் ஆகியோரால் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு, தேருக்கு புனித நீா் தெளிக்கப்பட்டு மந்திரிக்கப்பட்டது. பின்னா் தோ் பவனி முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.

Advertisement

Advertisement

காரைக்கால், குரும்பகரம், கோட்டுச்சேரி, தென்னங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து சனிக்கிழமை காலை திருப்பலியுடன் கொடியிறக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments