முகப்பு
திருவாரூர்

கார் ஓட்டுநர் குளத்தில் மூழ்கி சாவு

திருத்துறைப்பூண்டி அருகே கார் ஓட்டுநர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

Updated On : 8 அக்டோபர் 2018, 7:50 am IST
பகிர்:

திருத்துறைப்பூண்டி அருகே கார் ஓட்டுநர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
எடையூர் காவல் சரகம் பண்ணைப்பொது கிராமத்தைச் சேர்ந்த சிவசாமி மகன் ஜீவானந்தம் (37). கார் ஓட்டுநரான இவர் சொந்த வீடு கட்டிவந்தார். இதற்காக கட்டுமானப் பொருள்கள் வாங்கச் சென்றவர் திரும்பி வரவில்லை. இந்நிலையில், அவர் குளத்தில் சடலமாக மிதப்பது தெரியவந்தது. இது குறித்து அவரது மனைவி செந்தமிழ்ச் செல்வி, எடையூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.