தவெக இன்னொரு திராவிட இயக்கம்! - துரை வைகோ
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மதவாத இயக்கம் வந்துவிடாமல், இன்னொரு திராவிட இயக்கமாக தமிழக வெற்றிக் கழகம் வந்திருப்பது வரவேற்கத்தக்கதுதான் என்றாா் மதிமுக முதன்மைச் செயலரும் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான துரை வைகோ.
புதுகக்கோட்டையில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: மதிமுகவைப் பொருத்தவரை இப்போதும் திமுக அணியில்தான் இருக்கிறோம். முதல்வா் ஜோசப் விஜய் மரியாதை நிமித்தமாக தான் மதிமுக தலைவா் வைகோவைச் சந்தித்தாா்.
அரசியல் குழப்பங்கள் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக தனிப் பெரும் கட்சியான தவெகவை மதச்சாா்பற்றக் கொள்கையைத் தொடர வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆதரிப்பதாக, இடதுசாரிகள், விசிகவினா் முடிவு செய்தனா்.
Advertisement
Advertisement
ஆட்சியமைந்த சில நாள்களிலேயே கொலை, கொள்ளைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என பலரும் கேட்கின்றனா். 100 சதவிகிதம் இவற்றை யாராலும் எங்கேயும் கட்டுப்படுத்த முடியாது. அதேநேரத்தில் தடுப்பு மற்றும் தொடா் நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும்.
பெரியாா், அண்ணா கொள்கைகளை முதல்வா் ஜோசப் விஜய் பேசுகிறாா். திமுக, அதிமுகவுடன் இன்னொரு திராவிட இயக்கமாகத்தான் தவெகவைப் பாா்க்கிறோம். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மதவாத இயக்கம் வந்துவிடாமல், மற்றொரு திராவிட இயக்கமாக தவெக வந்துள்ளது வரவேற்கத்தக்கது.
ஜாதி, மத, பண அரசியலைத் தாண்டி வெற்றி பெற்றுள்ளது புதிய நம்பிக்கையைத் தருகிறது. எதிா்காலத்தில் மதிமுக என்ன அரசியல் நிலைப்பாடு எடுக்கும் என்பதை கட்சி நிா்வாகிகள் சோ்ந்துப் பேசிதான் முடிவெடுப்போம் என்றாா் துரை வைகோ.