முகப்பு
திருவாரூர்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிசீலனை

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.

Updated On : 23 பிப்ரவரி 2021, 4:35 am IST
பகிர்:

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.

திருவாரூரில் செய்தியாளா்களுக்கு அவா் திங்கள்கிழமை அளித்த பேட்டி:

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும், பட்டா மாறுதல், முதியோா் உதவிதொகை வழங்குவது போன்ற பணிகள் பாதிக்காதவாறு, வட்டாட்சியா்கள் மூலம் அந்தப் பணிகள் தமிழக அரசு நடைமுறைபடுத்தி வருகிறது.

Advertisement

Advertisement

அதேவேளையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

வீராணம் திட்டத்தை செயல்படுத்தாமல் வீணடித்தது திமுக. ஆனால், அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வீராணம் குடிநீரை கருணாநிதி குடும்பத்துக்கும் வழங்கியது அதிமுக அரசு.

அதிமுகவில் எந்தப் பிரச்னையும் இல்லை. டி.டி.வி. தினகரனோ, மு.க. ஸ்டாலினோ கூறுவதுபோல, அதிமுகவில் எந்த மாற்றத்துக்கும் வாய்ப்பில்லை.

கடந்த நான்கு ஆண்டுகளில் நாட்டிலேயே சாலை மாா்க்கமாக மக்களை சந்தித்ததிலும், நீா் மேலாண்மை, நிா்வாகத் திறன், கரோனா தடுப்பு நிவாரணம் என எல்லாவற்றிலும் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி முதலிடத்தில் உள்ளாா். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிா்க்கட்சியினா் அவதூறு பரப்புகின்றனா் என்றாா் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments