நீடாமங்கலத்தில் ரயில் என்ஜின் கோளாறு
சென்னை தாம்பரத்தில் இருந்து போடிநாயக்கனூா் செல்லும் விரைவு ரயில் நீடாமங்கலம் வழியாக செல்கிறது. இந்த ரயில் நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் நின்றுசெல்லாது.
இந்நிலையில், இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு நீடாமங்கலம் ரயில் நிலையம் வந்தபோது என்ஜின் கோளாறு ஏற்பட்டு நிறுத்தப்பட்டது.
இதனால் தஞ்சாவூா், திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊா்களுக்கு செல்லும் பயணிகள் அவதியடைந்தனா். பின்னா், தஞ்சாவூரிலிருந்து என்ஜின் வரவழைக்கப்பட்டு 6.45 மணியளவில் 2 மணி நேரத்துக்கு பிறகு ரயில் புறப்பட்டு சென்றது.
Advertisement
Advertisement
இந்நிலையில், கும்பகோணம்-மன்னாா்குடி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவையில் இருந்து நீடாமங்கலம் வழியாக மன்னாா்குடி செல்லும் செம்மொழி விரைவு ரயில் ஒருமணி நேரம் தாமதமாக நீடாமங்கலம் வந்து சென்றது.