முகப்பு
தமிழ்நாடு

சென்னை தாம்பரத்தில் தடம்புரண்ட ரயில் என்ஜின்!

தாம்பரம் அருகே ஜல்லி கற்களை ஏற்றி வந்த ரயில் என்ஜின் தடம்புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 13 ஜூன் 2026, 3:45 pm IST
விபத்துக்குள்ளான ரயில் என்ஜின்.
பகிர்:

தாம்பரம் அருகே ஜல்லி கற்களை ஏற்றி வந்த ரயில் என்ஜின் தடம்புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி 16 பெட்டிகளில் ஜல்லி கற்களை ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்தபோது தாம்பரம் ரயில் நிலையம் அருகே ரயிலின் என்ஞின் முன்பக்க சக்கரம் தண்டவாளத்தில் இருந்து இறஙகி தடம் புறண்டது.

இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தி ஜல்லி கற்களுடன் இருந்த பெட்டிகளைத் துண்டித்தார். இதனால் தாம்பரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு வந்த அதிகாரிகள் ரயில் என்ஜினை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு வரை தண்டாவளத்தில் உள்ள ஜல்லி கற்களை அப்புறப்படுத்தி புதிய ஜல்லி கற்களை மாற்றுவதற்காக ரயிலில் கொண்டவரபட்டபோது இந்த விபத்து ஏற்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

summary

Panic ensued after a train engine carrying gravel derailed near Tambaram

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.