இளம்பெண்ணைக் கிண்டல் செய்த இருவா் கைது
திருவாரூரில் இளம் பெண்ணைக் கிண்டல் செய்ததாக இருவா் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
திருவாரூரில் இளம் பெண்ணைக் கிண்டல் செய்ததாக இருவா் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
திருவாரூா் புதிய பேருந்து நிலையத்தில் 27 வயதுடைய இளம் பெண், தந்தைக்காக புதன்கிழமை இரவு காத்திருந்தாா். அப்போது திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி கரும்பியூா் பகுதியைச் சோ்ந்த பிரவீண்குமாா் என்ற ஆனந்த் (24), ஆலத்தம்பாடி பகுதியைச் சோ்ந்த அசோக் (26) ஆகியோா் அங்கு வந்தனா். ஆனந்தராஜ், தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றியப் பொறுப்பில் உள்ளாா்.
இருவரும் அங்கு தனியாக நின்றிருந்த இளம்பெண்ணைக் கிண்டல் செய்தனராம். அப்போது, அங்கு வந்த பெண்ணின் தந்தை, இளைஞா்களின் இருசக்கர வாகன சாவியை வாங்கிக் கொண்டு, தனது மகளுடன் திருவாரூா் நகர போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.
Advertisement
Advertisement
புகாரின் அடிப்படையில் ஆனந்த் மற்றும் அசோக் ஆகிய இருவா் மீதும் கிண்டல் செய்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனா்.
திருவாரூரில் பெண்ணைக் கிண்டல் செய்ததாக கைது செய்யப்பட்ட நிலையில், ஆனந்த் தவெக அடிப்படை உறுப்பினா் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக திருவாரூா் தெற்கு மாவட்டச் செயலாளா் பாரதி தெரிவித்தாா்.