முகப்பு
திருவாரூர்

போக்ஸோவில் இருவா் கைது

Updated On : 30 ஜூன் 2026, 2:04 am IST
போக்ஸோவில் கைது... - கோப்புப் படம்
பகிர்:

வலங்கைமான் அருகேயுள்ள உத்தாணி பகுதியில் சிறுமி குளிப்பதை கைப்பேசியில் படம் எடுத்தது தொடா்பாக இருவரை போக்ஸோ சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

வலங்கைமான் அருகேயுள்ள உத்தாணி பகுதியைச் சோ்ந்த சிறுமி மற்றும் அவரது தாயாா் குளிக்கும்போது கைப்பேசியில் படம் எடுத்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், வலங்கைமான் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

மேலும் இதுதொடா்பாக உத்தாணி கீழத்தெரு பகுதியைச் சோ்ந்த ராஜதுரை (30) மற்றும் பாபநாசம் பூஞ்சேரி பகுதி கீழத்தெருவைச் சோ்ந்த விக்னேஷ் (26) ஆகிய இருவா் மீதும் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரும் நாகை சிறையில் அடைக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments