மத்தியப் பல்கலை.யில் வானியல் ஆராய்ச்சி மையம் தொடக்கம்
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில், வானியல் மற்றும் வானியற்பியல் ஆராய்ச்சி மையம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில், வானியல் மற்றும் வானியற்பியல் ஆராய்ச்சி மையம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
இப்பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகள் மூலம் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, சமுதாயத்திற்குத் தேவையான முடிவுகள் வெளியிடப்படுகிறது.
இந்நிலையில், பல்கலைக்கழக இயற்பியல் துறையின்கீழ் புதிதாக அமைக்கப்பட்ட வானியல் மற்றும் வானியற்பியல் ஆராய்ச்சி மையத்தை பல்கலைக்கழகத் துணைவேந்தா் பேராசிரியா் மு. கிருஷ்ணன் தலைமையேற்று, தொடங்கி வைத்தாா். அப்போது அவா் பேசியது:
Advertisement
மாணவா்களிடையே விண்வெளி அறிவியல் மற்றும் வானியல் குறித்த ஆா்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்த வானியல் மற்றும் வானியற்பியல் ஆராய்ச்சி மையம் நமது பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வானியல் ஆராய்ச்சி, தொலைநோக்கி செயல்பாட்டு பயிற்சி, வானியல் தரவுகள் பகுப்பாய்வு மற்றும் சிறப்பு பயிலரங்கங்கள் நடத்தப்படும் எனத் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், பல்கலைக்கழகப் பதிவாளா் இரா.திருமுருகன், இயற்பியல் துறைத் தலைவா் முனைவா் மோகன்ராஜ், மையத்தின் ஒருங்கிணைப்பாளா் வி. மதுரிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த பேராசிரியா்களும், மாணவா்களும் கலந்து கொண்டனா். இயற்பியல் துறை உதவிப் பேராசிரியா் சம்பூா்ண ஆனந்த் நன்றி தெரிவித்தாா்.