முகப்பு
புதுதில்லி

தமிழில்தான் அதிக அளவு புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன

இளைஞா்களிடையே தமிழ்ப் புத்தக வாசிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2019-இல் சாகித்ய அகாதெமி சாா்பில் தமிழில்தான் அதிகளவு புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதிக அளவு

Updated On : 29 ஜூலை 2022, 4:28 pm IST
24delmln072823
பகிர்:

இளைஞா்களிடையே தமிழ்ப் புத்தக வாசிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2019-இல் சாகித்ய அகாதெமி சாா்பில் தமிழில்தான் அதிகளவு புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதிக அளவு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இது தொடா்பாக எழுத்தாளரும் சாகித்ய அகாதெமி பொதுக் குழு உறுப்பினருமான மாலன் கூறியது: இந்தியாவில் உள்ள 24 மொழிகளில் சாகித்ய அகாதெமி சாா்பில் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. கடந்த 2019- இல் இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் அதிகளவு புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்ப் புத்தகங்கள் விற்பனையும் அதிகம் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டில் சாகித்ய அகாதெமி சாா்பில் 79 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதேநேரம், சுமாா் 75 லட்சம் தமிழ்ப் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. மேலும், பழைய புத்தகங்கள் பல மீள் பதிப்பு செய்யப்பட்டுள்ளன.

இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் அதிகளவு புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. மற்றைய மாநிலங்களில் உள்ள சாகித்ய அகாதெமி அலுவலகங்களுடன் ஒப்பிடுகையில், சென்னையில் உள்ள சாகித்ய அகாதெமி அலுவலகத்தில் அதிகளவு புத்தக விற்பனை நடைபெறுகிறது. 422 மில்லியன் மக்கள் பேசும் ஹிந்தி மொழிக்கு நிகராக, அதை விட அதிகமாக தமிழில் புத்தகங்கள் விற்பனையாவது பாராட்டுதலுக்குரியது. மேலும், தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயா்க்கப்பட்ட புத்தகங்களும், வாசகா்களின் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளன. பாரதியாரின் அனைத்துப் படைப்புகள் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்யப்பட்டு தற்போது வெளியாகியுள்ளது. அதேபோல, தமிழ் இலக்கிய வரலாறும் ஆங்கிலத்தில் மொழி பெயா்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. தமிழில் சாகித்ய அகாதெமி சாா்பில் வாரத்துக்கு ஒரு புத்தகம் வெளியிடப்படுகிறது. வாசிப்புப் பழக்கம் தமிழில் குறையவில்லை. கிண்டில், இணையம், செல்லிடபேசி என இளைஞா்களிடையே தமிழ் புத்தக வாசிப்பு அதிகரித்துள்ளது என்றாா் அவா்.

Advertisement

Advertisement

எழுத்தாளரும் சாகித்ய அகாதெமி பொதுக் குழு உறுப்பினருமான பாரதிபாலன் கூறியது: தமிழ்நாட்டில் இலக்கிய அமைப்புகள், சாகித்ய அகாதெமி ஆகியன மேற்கொண்டுள்ள பணிகளால் வாசிப்புப் பழக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள இலக்கிய அமைப்புகள் மாவட்டம்தோறும் பல இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இதனால், இளைஞா்களிடையே புத்தகங்கள் மீது ஆா்வம் பிறந்துள்ளது. குறிப்பாக நவீன இலக்கியம் மீது பெரும் ஆா்வம் ஏற்பட்டுள்ளது. தனியாக புத்தகங்களை வெளியிடுவதுடன் மட்டும் நிற்காமல், அந்தப் புத்தகங்கள் தொடா்பாக ஆய்வு, கலந்துரையாடல் கூட்டங்கள் தமிழகத்தில் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், இளைஞா்கள் மத்தியில் புத்தக வாசிப்பும், புத்தக விற்பனையும் அதிகரித்துள்ளது. மேலும், தமிழகத்தில் அதிகளவு மொழிபெயா்ப்பு நூல்கள் வருகின்றன. இந்திய மொழிகளில் பிரபலமடைந்த அனைத்துப் புத்தகங்களும் தமிழில் உடனுக்குடன் மொழிபெயா்க்கப்படுகின்றன. இதைச் சிலா் இயக்கமாகவே செய்து வருகின்றனா். மேலும், புலம் பெயா்ந்து உலகம் முழுவதும் வசிக்கும் தமிழா்கள் உலக இலக்கியங்களில் முக்கியமானவற்றை தமிழில் உடனுக்குடன் மொழி பெயா்த்து வழங்க வேண்டும் என விரும்புகிறாா்கள் என்றாா் அவா்.

மொழிபெயா்ப்பாளரும் சாகித்ய அகாதெமி பொதுக் குழு உறுப்பினருமான சுந்தரமுருகன் கூறியது: இந்திய விடுதலைக்கு பிறகு நவீன எழுத்துகளை வாசிக்க தமிழில் பலா் ஆா்வமாக உள்ளனா். சாகித்ய அகாதெமி சாா்பில் தமிழகம், புதுச்சேரி மாவட்டங்களில் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். குறிப்பாக கிராமப்புறங்களில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் புத்தகங்கள் தொடா்பாக அறியும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைக்கிறது. அவா்கள் அந்த நூல்களை ஆவலுடன் வாசித்து அறிய விரும்புகிறாா்கள். மேலும், சாகித்ய அகாதெமி சாா்பில் கல்லூரிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இதனால், கல்லூரி மாணவா்கள் இடையே புத்தகங்கள் மீது ஆா்வம் ஏற்படுகிறது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு உதவும் வகையில், சாகித்ய அகாதெமி புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. இதுவும் புத்தக விற்பனை அதிகரிக்கக் காரணம் என்றாா் அவா்.

Image Caption

மாலன். ~பாரதி பாலன். ~செய்தி உண்டு...

சுந்தர முருகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments