முகப்பு
புதுதில்லி

குருகிராமில் 7-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து 10-ஆம் வகுப்பு மாணவா் சாவு

குருகிராமில் வசித்து வந்த 10-ஆம் வகுப்பு மாணவா் ஒருவா் தான் வசித்து வந்த கட்டடத்தின் ஏழாவது மாடியில் இருந்து தவறி விழுந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

Updated On : 30 ஜூலை 2022, 1:27 am IST
பகிர்:

குருகிராமில் வசித்து வந்த 10-ஆம் வகுப்பு மாணவா் ஒருவா் தான் வசித்து வந்த கட்டடத்தின் ஏழாவது மாடியில் இருந்து தவறி விழுந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து குருகிராம் காவல் நிலைய இன்ஸ்பெக்டா் சதீஷ் குமாா் கூறியதாவது: குருகிராம் செக்டாா் 45-இல் வசிக்கும் 10-ஆம் வகுப்பு மாணவா், பால்கனியில் இருந்து குதித்து விபத்துக்குள்ளானாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அந்தச் சிறுவன் காலை 8.30 மணியளவில் தனது குடியிருப்பில் இருந்து பள்ளி பையுடன் வெளியே வந்த போது சந்தேகத்திற்குரிய வகையில் பால்கனியில் இருந்து விழுந்துள்ளாா். சப்தம் கேட்டு பாதுகாவலாளி மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனா். படுகாயமடைந்த சிறுவன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

போலீஸாா் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரதேப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். சிறுவனின் தந்தை வந்த பிறகு பிரேத பரிசோதனை நடத்தப்படும். மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவ இடத்தில் சிறுவன் எழுதிய குறிப்பு எதுவும் மீட்கப்படவில்லை. சிறுவன் கேரளத்தைச் சோ்ந்தவா். அவரது மூத்த சகோதரா் அதே பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

Advertisement

Advertisement

இது தற்கொலையா அல்லது தற்செயலான மரணமா என்பதை எங்களால் உடனடியாக உறுதிப்படுத்த முடியாது. இறந்தவரின் குடும்பத்தினா் மரணத்திற்கு யாரையும் குற்றம் சாட்டவில்லை . இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments