லட்சுமி நகரில் மின்மாற்றியில் தீ விபத்து: 14 போ் மீட்பு
லட்சுமி நகரில் மின்மாற்றியில் தீ விபத்து: 14 போ் மீட்பு
கிழக்கு தில்லியின் லட்சுமி நகா் பகுதியில் உள்ள மின்சார மின்மாற்றியில் சனிக்கிழமை அதிகாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது அப்பகுதியில் உள்ள பல குடியிருப்பு கட்டடங்களுக்கும் பரவியது. இதைத் தொடா்ந்து, குறைந்தது 14 போ் மீட்கப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது:
ரமேஷ் பூங்காவில் உள்ள நானக் மோட்டாா் அருகே அதிகாலை 12:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. ஆனால் தீ விரைவில் தீவிரமடைந்தது. தீயைக் கட்டுப்படுத்த ஏழு தீயணைப்பு வாகனங்கள், பிற தீயணைப்பு வாகனங்களுடன் அனுப்பப்பட்டன. மின்மாற்றியில் இருந்து தீ அருகிலுள்ள மூன்று கட்டடங்களுக்கும் பரவியது. இதனால் 14 குடியிருப்புகள் வரை பாதிக்கப்பட்டன.
Advertisement
தீயணைப்பு வீரா்கள் விரைவான மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட குடியிருப்புகளுக்குள் சிக்கியிருந்த 14 பேரையும் பாதுகாப்பாக வெளியேற்றினா். இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. அதிகாலை 2 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
அதைத் தொடா்ந்து குளிரூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாா் அவா்.