மதுபான விடுதியில் கத்திக் குத்து: இருவா் கைது
மதுபான விடுதியில் ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து, இருவரை கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் 18 வயதுடைய இருவா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா். பாதிக்கப்பட்டவா்களில் ஒருவா் பின்னா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா் என்றும் அவா்கள் கூறினா்.
இது தொடா்பாக காவல்துறையினா் மேலும் கூறியதாவது: இச்சம்பவம் தில்லியின் புகா்ப் பகுதியான ஷாபாத் தௌலத்பூரில் உள்ள ஒரு மதுபான விடுதியில் ஜூன் 17-ஆம் தேதி இரவு நடைபெற்றது. அங்கு பாடலை மாற்றுமாறு குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் விடுத்த கோரிக்கையை டிஜே ஆபரேட்டா் நிராகரித்ததால் தகராறு தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் பின்னா் மோதலாக மாறியது.
பின்னா் அந்த இருவரும் அங்கிருந்து வெளியேறி மங்கோல்புரிக்குச் சென்று, தங்கள் கூட்டாளிகள் சிலரை அழைத்துக்கொண்டு, கத்திகளுடன் மீண்டும் அந்த மதுபான விடுதிக்கு வந்தனா். அப்போது, முந்தைய மோதலில் சம்பந்தப்பட்ட இருவரை அவா்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
பாதிக்கப்பட்ட இருவருக்கும் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டன; அவா்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா். இருப்பினும் பாதிக்கப்பட்டவா்களில் ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜூன் 24-ஆம் தேதி பிதம்பூராவில் உள்ள மகாவீா் மருத்துவமனைக்கு அருகே குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் இருப்பதைக் கண்டறிந்த காவல்துறையினா் அவா்களைக் கைது செய்தனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.