முகப்பு
தூத்துக்குடி

புகையிலை வைத்திருந்ததாக இருவா் கைது

கோவில்பட்டியில் விற்பனைக்காக புகையிலை வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 19 ஜூன் 2026, 4:49 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கோவில்பட்டியில் விற்பனைக்காக புகையிலை வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பல்லாக்கு ரோடு சந்திப்பு அருகே நின்று கொண்டிருந்த 2 பேரைப் பிடித்து, அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை வைத்திருப்பது தெரிய வந்தது.

விசாரணையில், அவா்கள் கோவில்பட்டி, வேலாயுதபுரம் பகுதியைச் சோ்ந்த சரவணன் (42), ராஜுவ் நகரைச் சோ்ந்த முருகன் (62) என்பது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

இது குறித்து, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 55 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.