முகப்பு
புதுதில்லி

குருகிராம்: குடிசையில் தீ விபத்து; ஒருவா் உயிரிழப்பு

தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள குருகிராம் செக்டா் 53-இல் ஒரு குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 வயது நபா் உயிரிழந்ததாகக் காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 7 மே 2026, 4:41 am IST
பலி - IANS
பகிர்:

தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள குருகிராம் செக்டா் 53-இல் ஒரு குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 வயது நபா் உயிரிழந்ததாகக் காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

மின்கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது: செவ்வாய்க்கிழமை இரவில் ஏற்பட்ட தீ விபத்து உடனடியாக குடிசை முழுவதும் பரவியது. குடிசையை விட்டு வெளியேற முடியாத நிலையில், அதன் உள்ளே இருந்த ராபின் தாஸ் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

சம்பவத்தின்போது அவா் மட்டுமே குடிசையில் இருந்தாா். அவருடைய மகள் மற்றும் மருமகன் அருகில் உள்ள குடிசையில் இருந்தனா்.

சம்பவம் தொடா்பாக தகவல் கிடைத்ததும் காவல் மற்றும் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். தீ அருகில் உள்ள குடிசைகளுக்குப் பரவாமல் இருக்கும் வகையில் விரைந்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீ முழுமையாக அணைக்கப்பட்டப் பிறகு தாஸ் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டாா். அவருடைய உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments