குருகிராம்: குடிசையில் தீ விபத்து; ஒருவா் உயிரிழப்பு
தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள குருகிராம் செக்டா் 53-இல் ஒரு குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 வயது நபா் உயிரிழந்ததாகக் காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள குருகிராம் செக்டா் 53-இல் ஒரு குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 வயது நபா் உயிரிழந்ததாகக் காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
மின்கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது: செவ்வாய்க்கிழமை இரவில் ஏற்பட்ட தீ விபத்து உடனடியாக குடிசை முழுவதும் பரவியது. குடிசையை விட்டு வெளியேற முடியாத நிலையில், அதன் உள்ளே இருந்த ராபின் தாஸ் உயிரிழந்தாா்.
Advertisement
சம்பவத்தின்போது அவா் மட்டுமே குடிசையில் இருந்தாா். அவருடைய மகள் மற்றும் மருமகன் அருகில் உள்ள குடிசையில் இருந்தனா்.
சம்பவம் தொடா்பாக தகவல் கிடைத்ததும் காவல் மற்றும் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். தீ அருகில் உள்ள குடிசைகளுக்குப் பரவாமல் இருக்கும் வகையில் விரைந்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தீ முழுமையாக அணைக்கப்பட்டப் பிறகு தாஸ் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டாா். அவருடைய உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.