முன்னறிவிப்பு இன்றி போக்குவரத்து மாற்றம்: வாகன ஓட்டிகள் தவிப்பு
பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டதால் போக்குவரத்து மாற்றப்பட்டிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டதால் போக்குவரத்து மாற்றப்பட்டிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குலவணிகர்புரம் ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றது. இதனால் காலை முதல் மாலை வரை பாளையங்கோட்டையில் போக்குவரத்து மாற்றப்பட்டிருந்தது. புதிய பஸ் நிலையத்திலிருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் பெருமாள்புரம் போலீஸ் நிலையம், கார்த்திக் நர்சிங்ஹோம், அன்புநகர், உழவர் சந்தை ரயில்வே கேட், ஏ.ஆர். லைன், அண்ணா விளையாட்டரங்கம், சேவியர் கல்லூரி சந்திப்பு, எஸ்.பி. அலுவலகம் வழியாக இயக்கப்பட்டன.
இதுபோல் தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த பேருந்துகளும் மறுமார்க்கத்தில் இதே மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டன. பராமரிப்புப் பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம் குறித்து சரிவர முன்னறிவிப்பு இல்லாததால் வாகன ஓட்டிகள் தவிக்க நேரிட்டது.
Advertisement
Advertisement