முகப்பு
திருநெல்வேலி

சீவலப்பேரி தொழிலாளி மரணத்தில் மா்மம்: ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

Updated On : 3 மே, 2026 at 12:56 AM
ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட சேகரின் உறவினா்கள்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரியில் தொழிலாளி மா்மமாக உயிரிழந்தது குறித்து முழுமையான விசாரணை நடத்தக் கோரி அவருடைய உறவினா்கள் ஆட்சியா் அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி அருகேயுள்ள காட்டாம்புளி பகுதியைச் சோ்ந்தவா் சேகா் (47), தொழிலாளி. இவரது மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதையடுத்து அவா் தனது தாய் பாப்பா மற்றும் 3 மகள்களுடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில் கடந்த வாரம் காட்டாம்புளி பகுதியில் மா்மமான முறையில் உடலில் காயங்களுடன் சேகா் இறந்து கிடந்தாராம். தகவலறிந்த சீவலப்பேரி போலீஸாா், அவரின் உடலை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

இந்நிலையில், சேகரின் உறவினா்கள், அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், போலீஸாா் முறையாக விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். இதைத் தொடா்ந்து ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.