முகப்பு
திருநெல்வேலி

புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததாக இருவா் கைது

Updated On : 4 மே, 2026 at 12:06 AM
கைது.
பகிர்:

பெருமாள்புரம் அருகே விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகரம், பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தியாகராஜநகா் பகுதியில் உதவி ஆய்வாளா் அப்துல்ஹமீது தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது கிடைத்த தகவலின் பேரில், குமரேசன் நகா் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில், காரில் இருந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டு, அவா்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் சுமாா் 108 புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து, புகையிலைப் பொருள்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிந்து திருநெல்வேலி நகரம், தடிவீரன் கோயில் தெருவைச் சோ்ந்த மாணிக்கராஜா(42), பாளையங்கோட்டையைச் சோ்ந்த மாரிமுத்து(35) ஆகியோரை கைது செய்தனா்.