மின் கசிவால் தீ: வீட்டு உபயோக பொருள்கள் எரிந்து நாசம்
திசையன்விளையில் மின் கசிவால் ஏற்பட்ட தீயில் வீட்டு உபயோக பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தருமபிறை தெருவைச் சோ்ந்தவா் ஜெபதுரை (60), இவா் பழைய இரும்பு தொழில் செய்து வருகிறாா்.
இவருக்குச் சொந்தமான கிடங்கு மற்றும் வீடு வெமணங்குடி தெருவில் உள்ளது. அதில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததாம்.
Advertisement
இதில், அங்கு உபயோகத்தில் இருந்த கிரைண்டா், ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், மோட்டாா் உள்பட பல்வேறு பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
தகவல் அறிந்த தீயணைப்பு மீட்புப் படையினா் விரைந்து சென்று தீயை அணைத்தனா். மேலும் திசையன்விளை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.