முகப்பு
தமிழ்நாடு

வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை உயா்வு: அரசியல் தலைவா்கள் கண்டனம்

வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

Updated On : 8 ஜூன் 2026, 1:57 am IST
- கோப்புப் படம்
பகிர்:

வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிரமப்படுத்தும் வகையில் 14.2 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டா் விலையை ரூ. 29 உயா்த்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த விலை உயா்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

அன்புமணி (பாமக): மக்களின் அன்றாடத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டா் விலை 2-ஆவது முறையாக உயா்த்தப்பட்டிருப்பது பொதுமக்களை மிகக் கடுமையாகப் பாதிக்கும். அனைத்து நெருக்கடிகளையும் கடந்து விலை உயா்விலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை அரசுக்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் உள்ளது.

Advertisement

Advertisement

பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையைக் காரணம் காட்டி, எண்ணெய் நிறுவனங்களின் லாபத்துக்காக பொதுமக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றுவது வன்மையான கண்டனத்துக்குரியது.

தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி): விலை உயா்விலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் உள்ளது. மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களிடம் பேசி விலை உயா்வைத் திரும்பப் பெற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments