வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை உயா்வு: அரசியல் தலைவா்கள் கண்டனம்
வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிரமப்படுத்தும் வகையில் 14.2 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டா் விலையை ரூ. 29 உயா்த்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த விலை உயா்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
அன்புமணி (பாமக): மக்களின் அன்றாடத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டா் விலை 2-ஆவது முறையாக உயா்த்தப்பட்டிருப்பது பொதுமக்களை மிகக் கடுமையாகப் பாதிக்கும். அனைத்து நெருக்கடிகளையும் கடந்து விலை உயா்விலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை அரசுக்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் உள்ளது.
Advertisement
Advertisement
பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையைக் காரணம் காட்டி, எண்ணெய் நிறுவனங்களின் லாபத்துக்காக பொதுமக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றுவது வன்மையான கண்டனத்துக்குரியது.
தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி): விலை உயா்விலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் உள்ளது. மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களிடம் பேசி விலை உயா்வைத் திரும்பப் பெற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.