இடைநிலை ஆசிரியர் சங்கப் பயிலரங்கு தொடக்கம்
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க 2 நாள் பயிலரங்கம் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க 2 நாள் பயிலரங்கம் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
பயிலரங்கின் முதல் அமர்வுக்கு மாநிலத் தலைவர் மு. கயத்தாறு தலைமை வகித்தார். முன்னாள் மாநில பொதுச்செயலர் ந. பர்வதராஜன் பேசினார். 2-வது அமர்வுக்கு மாநில துணைப் பொதுச்செயலர் ம. எட்வின் பிரகாஷ் தலைமை வகித்தார். முன்னாள் மாநில பொதுச்செயலர் ஆ. சுப்பிரமணியன் பேசினார். 3-வது அமர்வுக்கு மாநில அமைப்புச் செயலர் அ. அருணகிரியார் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலர் க.இசக்கியப்பன் பேசினார்.
2-ம் நாள் பயிலரங்கில் திருநெல்வேலி மாவட்ட அமைப்பாளர் சி. முத்துக்குமாரசுவாமி, மாநில பொருளாளர் ஆ. மதலைமுத்து, மாநிலச் செயலர்கள் மூ. மணிமேகலை, அ. ஜெயராணி ஆகியோர் பேசுகின்றனர். மாவட்டத் தலைவர் ஆர். ஹெர்பர்ட் ராஜா நன்றி கூறுகிறார்.
Advertisement
Advertisement
திங்கள்கிழமை நடைபெறும் 2-ம் நாள் பயிலரங்கில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.