இந்திய ஜனநாயக வாலிபர் சங்கப் பேரணி, கூட்டம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 14-வது மாநில மாநாட்டையொட்டி நாகர்கோவிலில் இளைஞர்கள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 14-வது மாநில மாநாட்டையொட்டி நாகர்கோவிலில் இளைஞர்கள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாகர்கோவில் கலைவாணர் கலையரங்கில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில மாநாடு மே 9-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. மாநாட்டை அகில இந்தியத் தலைவர் எம்.பி. ராஜேஷ் தொடக்கிவைத்தார். சனிக்கிழமை மாலை கருத்தரங்கு நடைபெற்றது. இளைஞர் முழக்கம் ஆசிரியர் இல. சண்முகசுந்தரம் தலைமையில் கே. சந்துரு, பாலபிரஜாபதி அடிகளார் ஆகியோர் பேசினர்.
ஞாயிற்றுக்கிழமை மாநாடு நிறைவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கர்நாடக மாநிலத் தலைவர் பரத்ராஜ், ஆந்திர மாநிலச் செயலர் கே. பாஸ்கர் வாழ்த்திப் பேசினர்.
Advertisement
Advertisement
பின்னர், இளைஞர்கள் பங்கேற்ற பேரணி நாகர்கோவில் ராமன்புதூர் சந்திப்பிலிருந்து தொடங்கியது. அகில இந்திய பொதுச் செயலர் அவாய் முகர்ஜி பேரணியைக் கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்.
செட்டிக்குளம், கோட்டாறு, மீனாட்சிபுரம், நாகராஜா கோவில் வழியாக பேரணி கலையரங்கை அடைந்தது. அங்கு அவாய் முகர்ஜி மாநாட்டு நிறைவுரையாற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் செ. முத்துக்கண்ணன் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் ஆர். வேல்முருகன், மத்தியக்குழு உறுப்பினர்கள் இல. சண்முகசுந்தரம், என். கல்பனா, சிஐடியூ அகில இந்திய துணைத் தலைவர் டி.கே. ரங்கராஜன் பேசினர்.
மாவட்டச் செயலர் என். ரெஜீஸ்குமார் வரவேற்றார். மாவட்டத் தலைவர் சி. சகிகுமார் நன்றி கூறினார்.