சாமிதோப்பில் மாணவர்களுக்கு பரிசளிப்பு
காமராஜர் பவுண்டேசன் சார்பில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா சாமிதோப்பில் நடைபெற்றது.
காமராஜர் பவுண்டேசன் சார்பில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா சாமிதோப்பில் நடைபெற்றது.
விழாவுக்கு, அமைப்பின் தேசியத் துணைத் தலைவர் பால ஜனாதிபதி தலைமை வகித்தார். பொதுச் செயலர் கே.ஜான்குமார், செயலர் எல்.நோயல்ராஜ், பொருளாளர் பிரபாகரன், மாநிலத் தலைவர் எஸ்.ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசியத் தலைவர் ஏ.நீலலோகிததாஸ் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினார். இதில், மதிமுக மாவட்டச் செயலர் வெற்றிவேல், அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி கல்விக் கழகச் செயலர் சி.ராஜன், மதச் சார்பற்ற ஜனதாதளம் மாவட்டத் தலைவர் டி.அருள்ராஜ், காந்திய மக்கள் இயக்கத் தலைவர் கதிரேசன், அகஸ்தீசுவரம் ஒன்றிய அதிமுக முன்னாள் செயலர் டி.அரிகிருஷ்ணபெருமாள், மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஆர்.எஸ்.ராஜன், சாமிதோப்பு ஊராட்சி முன்னாள் தலைவர் யு.தியாகராஜன், சமூக ஆர்வலர் பி.பி.கே.சிந்துகுமார் உள்ளிட்டோர் பேசினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.