நாகர்கோவிலில் வேன் ஓட்டுநர் வெட்டிக் கொலை
நாகர்கோவிலில் வேன் ஓட்டுநரை வெட்டிக் கொன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவிலில் வேன் ஓட்டுநரை வெட்டிக் கொன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் இருளப்புரத்தைச் சேர்ந்தவர் ரெகு (24 ) , வேன் ஓட்டுநரான இவர் குளச்சல் பகுதியைச் சேர்ந்த அபிஷாவை (24) காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவருடனான தகராறில் அபிஷா தன் தாய் வீட்டில் வசித்து வந்தார். ரெகு தன் தாய் எழிலரசியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், சனிக்கிழமை இரவு வெளியே சென்று வருவதாகக் கூறிச் சென்ற ரெகு வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை இருளப்பபுரம் பகுதியில் சாலையோரத்தில் ரெகு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.
இதுகுறித்து நாகர்கோவில் காவல் துணைக் கண்காணிப்பாளர் இளங்கோவன், கோட்டாறு காவல் நிலைய ஆய்வாளர் அன்புபிரகாஷ், உதவி ஆய்வாளர் அருளப்பன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். கோட்டாறு போலீஸார் வழக்குப் பதிந்து, ரெகுவை கொலை செய்தவர்கள் யார் என்பதுகுறித்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.