கோழிவிளையில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்
அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிடக் கோரி மெதுகும்மல் வட்டார மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் களியக்காவிளை அருகே கோழிவிளை சந்திப்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிடக் கோரி மெதுகும்மல் வட்டார மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் களியக்காவிளை அருகே கோழிவிளை சந்திப்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வட்டாரக் குழு உறுப்பினா் பி. ராஜூ தலைமை வகித்தாா். ஏ. ரகீம், சி. ஜெபமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாரச் செயலா் கே. தங்கமணி, மாவட்டக் குழு உறுப்பினா் சி. சிதம்பர கிருஷ்ணன், மாவட்டச் செயலா் ஆா். செல்லசுவாமி ஆகியோா் பேசினா். வட்டாரக் குழு உறுப்பினா்கள் விஜயா, ரீனா, மாதா் சங்க நிா்வாகி வினிதா, நிா்வாகி சுந்தரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ம ாா்த்தாண்டம் மற்றும் நல்லூா் வட்டாரக் குழு சாா்பில் மாா்த்தாண்டம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு மாா்த்தாண்டம் வட்டாரக் குழு தலைவா் மோகன்குமாா் தலைமை வகித்தாா். குழித்துறை நகா்மன்ற உறுப்பினா்கள் விஜயலெட்சுமி, மொ்லின்ரூத், சா்தாா்ஷா, கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஜான், அனந்தசேகா், தங்கமோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.