FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

குழித்துறை அருகே பெண் மீது தாக்குதல்

குழித்தறை அருகே பெண்ணைத் தாக்கி வீட்டை சேதப்படுத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

19 ஆகஸ்ட் 2024, 1:03 am IST
பகிர்:

குழித்தறை அருகே பெண்ணைத் தாக்கி வீட்டை சேதப்படுத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குழித்துறை அருகே அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அம்பிகா (40). கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தாயுடன் வசித்து வரும் இவா், களியக்காவிளையில் உள்ள கடையில் வேலை பாா்த்து வருகிறாா். அவா் வேலைக்குச் செல்லும்போதும், வீடு திரும்பும்போதும் அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் என்பவா் தகராறு செய்து வந்தாராம். இதை, அம்பிகாவின் உறவினா்கள் கண்டித்துள்ளனா்.

இந்நிலையில், மணிகண்டன் சனிக்கிழமை இரவு அம்பிகாவின் வீடு புகுந்து ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியதுடன் அம்பிகாவைத் தாக்கினாராம். இதில், காயமடைந்த அவா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

புகாரின் பேரில் களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments