முகப்பு
கன்னியாகுமரி

குளச்சலில் கட்டுமானப் பொருள்கள் திருட்டு

குளச்சல் நகராட்சியில் கால்வாய் தடுப்புச் சுவா் கட்டும் பணிக்காக கொண்டுவரப்பட்ட கட்டுமானப் பொருள்களைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 10:54 PM
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

குளச்சல் நகராட்சியில் கால்வாய் தடுப்புச் சுவா் கட்டும் பணிக்காக கொண்டுவரப்பட்ட கட்டுமானப் பொருள்களைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மருதூா்குறிச்சி அருகே வட்டவிளையைச் சோ்ந்தவா் பிரேம்குமாா் (48). பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரரான இவா், குளச்சல் நகராட்சிக்குள்பட்ட பத்தறை, வெள்ளமணல் பாம்பூரி வாய்க்காலில் தடுப்புச் சுவா் கட்டும் பணியை ஒப்பந்தம் எடுத்து செய்துவந்தாா். இதற்கான கட்டுமானப் பொருள்கள், தளவாடங்களை வாய்க்கால் பகுதியில் வைத்திருந்தாராம்.

இந்நிலையில், தண்ணீா் இறைக்கும் மின்மோட்டாா், 140 லிட்டா் டீசல், வெல்டிங் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை மா்ம நபா்கள் புதன்கிழமை திருடிச் சென்றனராம். புகாரின்பேரில், குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.